Pages

Sunday 4 March 2012

மேலப்பாளையத்தில் பல்நோக்கு மருத்துவமனை - காலத்தின் கட்டாயம்

மேலப்பாளையத்தில் பல்நோக்கு மருத்துவமனை காலத்தின் கட்டாயம்:- 

அன்பார்ந்த மேலப்பாளையம் சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹு )

மேலப்பாளையத்தில் மேலப்பாளையம் மக்களால் 
ஒரு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட வேண்டும்.


இது குறித்து மேலப்பாளையம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் கூடி இன்ஷா அல்லாஹ் விரைவில் மருத்துவமனை உருவாக்குவதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் 

மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கம் இருந்த இடத்தில் 
அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய பல்நோக்கு மருத்துவமனை கட்டலாம்.
ஆலோசிப்பார்களா ? நமது  ஊர் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, எப்பொழுதும் மக்களுக்காக சிந்திக்கின்ற நமது சமுதாய தலைவர்கள்.

நமது ஊருக்கு சனி பிடித்ததின் ஆரம்பமே டாக்டர்களால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். 

உடையார்பட்டி லட்சுமி பிரசவ மருத்துவமனைக்கு  நமது பெண்கள் போனாலே 'ஆப்பு'ரேசன் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? 

மருத்துவ முகாம் என்று மக்களை ஏமாற்றாமல் நம் மக்களுக்கு நிரந்தரமாக குறைந்த விலையில் மருத்துவம்  பார்க்க வழி ஏற்படுத்துங்கள். 

இன்று நமது மக்களின் நோயை வைத்து எத்தனை டாக்டர்கள் காசை பிடுங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது யாருக்கு தெரியும் ?

அறிவாலும், நோயற்ற வாழ்வாலும் சமுதாயத்தை பேணி பாதுகாப்போம்.


வெற்று கோசங்களால் அல்ல.

“இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” - Al Quran 46:15


ஒரு மய்யித்தைப் பின்தொடர்ந்து மூன்று விஷயங்கள் செல்லும்: 
1. அவனுடைய குடும்பம் 2. சொத்து 3. அமல் 
அவற்றில் இரண்டு திரும்பி விடும். ஒன்று மாத்திரம் அதனுடன் இருக்கும். குடும்பமும் சொத்தும் திரும்பி விடும். அமல் மாத்திரம் கூட இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
    ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்றைத் தவிர அவனது செயல்பாடுகள் முடிவுக்கு வந்து விடுகின்றன. அவைகளாவன: 1.நிலையான தர்மம், 2. பயனளிக்கும் கல்வி, 3. தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள குழந்தை ஆகியனவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
  

 




No comments:

Post a Comment