Pages

Wednesday 31 October 2012

ஹிஜ்ரி நாட்காட்டி காலண்டர் 1434 HIJRI CALENDAR 2013

Hijri Calendar 1434
ஹிஜ்ரி நாட்காட்டி 1434 காலண்டர் 
English Calendar 2013
Tamil Nadu Government Holidays 2013

தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள்  2013








Monday 22 October 2012

முக்கியமான அரசு வலை தளங்கள் Useful Goverment Websites

Tamilnadu School Books Online:
www.textbooksonline.tn.nic

Tamilnadu Government Job Register:
www.tnvelaivaaippu.gov.in

Tamil Nadu Government Bus Ticket booking online:
www.tnstc.in
+914425364656

Indian Government Passport Booking online:
www.passportindia.gov.in

Indian Railway Ticket Booking Online:
www.irctc.co.in
+914425300000

Tamilnadu Public Service Commission website:
www.tnpsc.gov.in
Toll Free: 18004251002

Name Change and Religion Name Change:
Tamil Nadu Government Gazettes
http://www.tn.gov.in/stationeryprinting
form available:
http://www.tn.gov.in/stationeryprinting/forms.htm
Goverment Publication Depot
No.816, Anna Salai
Chennai - 600 002.

  Name Change Service Available 
         through all Tamil Nadu
      Contact: +91 7845915533
பெயர் மாற்றம் செய்ய மற்றும் தவறாகி போன பெயர்கள் சரி செய்ய,
மதம் மாறியவர்கள் தங்களது பெயரை மாற்றி கொள்ள- 
நீங்கள் தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் தமிழ்நாடு அரசு 
பதிவேட்டில் ( Tamilnadu Government Gazettes) பதிய 
ஏற்பாடு (சர்வீஸ்) செய்து தரப்படும் - 
தொடர்ப்புக்கு +91 7845915533


By
M. Hasan
Email: meerasocialtrust@gmail.com
Meera Social Trust ( MST )
Melapalayam
Tirunelveli District 627005

Sunday 26 August 2012

இன்ஷா அல்லாஹ் நீங்களும் ஆகலாம் IAS IPS IFS


IAS, IPS, IFS தேர்வெழுதத் தகுதிகள்:


சமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வைஎழுதுவதற்கு தேவையான தகுதி நிலைகள் பற்றி தெளிவாக அறிவது அவசியம்.

கல்வித் தகுதி :

* அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(குறைந்தபட்ச தகுதி இளநிலைப் பட்டம்).

* இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத் தொகுதியின் ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை எழுதலாம்.

* ஆனால், Main தேர்வு எழுத செல்லும் முன்பாக, இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை காண்பிக்க வேண்டும்.

* அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை (professional) மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதியை வைத்துள்ளவர்களும், இந்தத் தேர்வை எழுதலாம்.

தேசிய அடையாள தகுதி :

* இந்திய குடிமக்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாக முடியும்.

* மேலும், கடந்த, 1 ஜனவரி, 1962ம் ஆண்டிற்கு முன்பாக, நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்தவர்கள் மற்றும் பர்மா, எத்தியோபியா, கென்யா, மாலவி, பாகிஸ்தான், இலங்கை, உகாண்டா, தான்சானியா, வியட்நாம், சையர் மற்றும் சாம்பியா போன்ற நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன் குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, IAS மற்றும் IPS ஆகலாம்.

வயது தகுதி :

* சிவில் சர்வீஸ் தேர்வெழுதுபவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

* பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 30 வயது வரை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.

* OBC பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 33 வயது வரை முயற்சி செய்யும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 35 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.

தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் :

பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.

* இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச்(OBC) சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 7 முறை முயற்சி செய்யலாம்.

* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 35 வயது வரை, எத்தனைமுறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.

விண்ணப்ப நடைமுறைகள் :

     சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒருவர், அதற்கான விண்ணப்பத்தை, தகவல் குறிப்பேட்டுடன் பெற வேண்டும். அதை எலக்ட்ரானிக் முறையில் ஸ்கேன் செய்ய முடியும் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய தபால் நிலையங்களிலும் பெற முடியும்.

     பூர்த்திசெய்த விண்ணப்பத்தை, அதற்கான Acknowledgement அட்டையுடன்Secretary, Union Public Service Commission, Dholpur House, New Delhi - 110011 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தொடர்புக்கு :

website:
www.azhagiyakadanias.com

AZHAGIYAKADAN I.A.S ACADEMY
MAKKA MASJID CAMPUS
No.822 ANNA SALAI
CHENNAI - 600 002.
Contact: 960006246, 7401429629

உணவு, தங்குமிடம், பயிற்சி, புத்தகங்கள் அனைத்தும் இலவசம். ஆனால் உங்களிடம் இறைநம்பிக்கையும்  தன்னம்பிக்கையும்  மட்டும் இருக்கவேண்டும். 

இன்ஷா அல்லாஹ் நீங்களும் ஆகலாம் IAS IPS IFS

Thursday 5 July 2012

இயேசு அழைக்கிறார் Jesus Calls for Christian

இயேசு அழைக்கிறார் 
இதோ இயேசு சீக்கிரம் வருகிறார் 

அதற்கு முன் அவர் கூறியவாறு
நடந்து கொள்ளுங்கள் 

மாத்தியூ  அதிகாரம் 7 வசனம் 21: 
பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் (கடவுளின் ) சித்தபடி 
செய்கிறவனே பரலோக ராஜியத்தில் (சுவர்க்கத்தில் ) 
பிரவேசிப்பானே எல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே 
கர்த்தாவே என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை 

பைபிளில் ஏதாவது இடத்தில் இயேசு தன்னை கடவுள் 
என்று கூறியுள்ளாரா ? அல்லது அவ்வாறு அதில் இருக்கிறதா ? 






Thursday 31 May 2012

துபை ஈமான் அமைப்பின் உயர் கல்வி உதவித் திட்டம்


துபை இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான் www.imandubai.com
இன்ஷா அல்லாஹ் வழக்கம் போல் இவ்வாண்டும் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.
 
2012 ஆம் ஆண்டு S.S.L.C. மற்றும் +தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துமேற்படிப்பைத் தொடர வசதியற்றதிறமையும் ஆர்வமும் மார்க்கப் பற்றுள்ள மாணவ மாணவியர்கள் கலை/அறிவியல்மருத்துவம்பொறியியல்,தொழில்நுட்ப பட்டயம் / பட்டப்படிப்புத் திட்டத்திற்கு வரவேற்கப்படுகின்றனர்.
 
JOURNALISM (இதழியல்), I.A.S., (இந்திய ஆட்சிப் பணி), I.P.S.,போன்ற படிப்பில் சேர்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் ஈமான் கல்விக்குழுவின் பரிந்துரைப்படி உதவித்தொகை (SCHOLARSHIP) வழங்கப்படும்.

தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்
i.         மதிப்பெண் சான்றிதழ் நகல்
ii.        மாணவ மாணவியர் பெயர்
iii.       பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
iv.       பிறந்த தேதி
v.        முழு முகவரி தொலைபேசியுடன்
vi.       பெற்றோர் பெயர்
vii.      தொழில் மற்றும் மாத வருமானம்
viii.       குடும்பம் பற்றிய தெளிவான சிறு குறிப்பு
ix.        ஜமாஅத் பரிந்துரை கடிதம்
உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விண்ணப்பித்தை IMAN EDUCATIONAL SCHOLARSHIP COUNCIL என்று தலைப்பிட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பத்தை www.imandubai.com எனும் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் ( Download ) செய்து கொள்ளலாம்.
INDIAN MUSLIM ASSOCIATION ( IMAN )
P O BOX NO. 13302
DUBAI – U.A.E.
 
கடைசி தேதி : 30 ஜுன் 2012

குறிப்பு : 

விண்ணப்பத்தை அஞ்சலில் மட்டுமே அனுப்பவும்

விண்ணப்பத்தை பதிவு அஞ்சல் ( Registered Post ) மற்றும் மின்னஞ்சல் 
( E-mail ) அனுப்ப வேண்டாம்.


தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை

Tamilnadu MINORITIES Welfare Department 

SCHOLARSHIP 2012 
அஸ்ஸலாமு அலைக்கும்
இத்துடன் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள
கல்வி உதவித்தொகை விவரம் இணைக்கப்பட்டுள்ளது

தங்களது பகுதியிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இச்செய்தி
சென்று சேர ஏற்பாடு செய்யுங்கள்

Ministry of Minority Affairs - Government of India:
Website: www.minorityaffairs.gov.in

Website: www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm
Email: tnminoritieswelfare@yahoo.com

Tamilnadu Minorities Welfare Department
807, 5th Floor, Anna salai
Chennai - 600 002.
Tamilnadu
Phone: 044 28520033



Tuesday 29 May 2012

மாதம் ஒரே ஒரு ரூபாய் ஒரு நபர் வீதம் - தலைகீழ் மாற்றம் இன்ஷா அல்லாஹ்

மாதம் ஒரே ஒரு ரூபாய்,  ஒரு நபர் வீதம் கொடுங்கள்.

சமுதாயத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்படும் 

இன்ஷா அல்லாஹ்....
  

நீங்கள் மாதம் ஒரு ரூபாய் ஒரு நபர் வீதம் கொடுங்கள்.
வீட்டிற்கு வீடு எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ,   
தலைக்கு ஒரே ஒரு ரூபாய் வீதம் ஒவ்வொரு மாதமும் 
கணக்கிட்டு கொடுங்கள். 

அதன் மூலம் பல சமுதாய பணிகளை செய்யலாம். 

அதை எந்த அரசியல் கட்சிகளிடம் கொடுத்து விடாதீர்கள்.

ஜமாத்தார்விடமோ அல்லது இதற்கென அறக்கட்டளை 
ஏற்படுத்தி பணிகள் ஆற்றலாம்.

உதாரணத்திற்கு :

1. வட்டியில்லாத கடன் கொடுக்கலாம்.
    ( வட்டியில் மூழ்கி முத்து கிடைக்கும் என்று மூர்ச்சையாகி மரணித்து 
    கிடக்கும் சமுதாயத்தை மீட்டெடுக்கலாம்)             
2. பள்ளிவாசலுக்கு ஜெனேரட்டேர்,  நல்ல ஒலி அமைப்பு  வசதி மற்றும் 
    என்ன வசதிகள் தேவையோ அனைத்தையும் செய்யலாம்.
    பள்ளிவாசலில் தகவல் தொடர்பு மையம் அமைக்கலாம்
    பள்ளிவாசலில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தலாம் 
3. வசதி இல்லாத குழந்தைகளுக்கு படிப்பு செலவு 
4. முக்கிய தேவையான மருத்துவமனை அமைத்தல் 
5. ஆண்கள்பெண்களுக்குகென தனி நூலகம் அமைத்தல் 
6. ஊருக்கென சமுதாய நல கூடம் அமைத்தல் 
7. தெருவுக்கு ஒரு டாக்டர் என படிக்க வைக்கலாம்
8. ஊர் சார்பாக தொழிற்சாலை நிறுவலாம்  
9.  வீட்டிற்கு வீடு  சோலார் மின் வசதி அமைத்தல்
10. பள்ளிக்கூடம் மற்றும் மதரசா அமைத்தல் 

இன்னும் ஏராள பணிகள் நம் கண் முன்...... 
ஆனால் நாமோ?

விறகை நெருப்புத் தின்று விடுவதைப் போல பொறாமை உங்களின் நற்செயல்களை அழித்துவிடுகிறது , எனவே எச்சரிக்கையாக இருங்கள் - 
என நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள். நூல் :அபூதாவூத் 

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், 
அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு 
சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - 
அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. 
அல்குர் ஆன் 13:11


சொந்த பிள்ளைகளையே தட்டழியை விடகூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. நம்முடைய வருங்கால சந்ததிகளையே 
நாம் தட்டழியை விட்டால் ,  ?!.....

Tuesday 6 March 2012

59. புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்



தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களைWWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். 

மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

Sunday 4 March 2012

58. நோன்பு பெருநாள்



நோன்பு பெருநாளை

 வெகு விமர்சையாக கொண்டாடுவோம். 






அஸ்ஸலாமு அழைக்கும் 

நபி ஸல் அவர்களின் பிறந்த நாளை நாமெல்லாம் விழாவாக ஊர்

 முழுக்க வட்டார வாரியாக சாப்பாட்டு சமைத்து மகிழ்ச்சியாக இருந்ததை

 போல வரும் நோன்பு பெருநாளையும் வெகு விமர்சையாக

கொண்டாடுவோம். 

            நோன்பு முழுக்க தெரு மாணவர்களிடையே குரான் கிராத் போட்டி,

அதான் (பாங்கு) கூறும் போட்டி, குரான் வினா விடை போட்டி, குரான்

 வசனங்கள் ஒப்பித்தல் போட்டி ஆகிய வற்றை நடத்தி பெருநாள்

 அன்றைக்கு பரிசு வழங்கலாம்.

             தெரு வாரியாக (சிறுமிகள் ,கன்னி பெண்கள், கல்யாணம் ஆன

 பெண்கள் என்று தனி தனியே அவர்களிடையே மார்க்கத்தை எவ்வாறு

 மேலும் பற்றுதலுடன் பின் பற்ற வேண்டும் அதுக்கு ஏற்றவாறு

 போட்டிகள் அமைய வேண்டும்) பெண்களிடையே போட்டி நடத்தி பரிசு

 வழங்கலாம்.

          பெருநாள் அன்றைக்கு பெண்கள் சமையலுக்கு விடுமுறை அளித்து


 ஊர் முழுக்க சமைத்து சாப்பிட்டு சந்தோசமாக இருப்போம்.


         குரான் இறங்கிய மாதத்தில் குரானை அனைத்து மக்களுக்கும் 


 சென்றடைய இந்த வழிமுறையை பின்பற்றலாமா ?

- ஹஸன், மேலப்பாளையம்

மேலப்பாளையத்தில் பல்நோக்கு மருத்துவமனை - காலத்தின் கட்டாயம்

மேலப்பாளையத்தில் பல்நோக்கு மருத்துவமனை காலத்தின் கட்டாயம்:- 

அன்பார்ந்த மேலப்பாளையம் சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹு )

மேலப்பாளையத்தில் மேலப்பாளையம் மக்களால் 
ஒரு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட வேண்டும்.


இது குறித்து மேலப்பாளையம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் கூடி இன்ஷா அல்லாஹ் விரைவில் மருத்துவமனை உருவாக்குவதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் 

மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கம் இருந்த இடத்தில் 
அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய பல்நோக்கு மருத்துவமனை கட்டலாம்.
ஆலோசிப்பார்களா ? நமது  ஊர் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, எப்பொழுதும் மக்களுக்காக சிந்திக்கின்ற நமது சமுதாய தலைவர்கள்.

நமது ஊருக்கு சனி பிடித்ததின் ஆரம்பமே டாக்டர்களால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். 

உடையார்பட்டி லட்சுமி பிரசவ மருத்துவமனைக்கு  நமது பெண்கள் போனாலே 'ஆப்பு'ரேசன் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? 

மருத்துவ முகாம் என்று மக்களை ஏமாற்றாமல் நம் மக்களுக்கு நிரந்தரமாக குறைந்த விலையில் மருத்துவம்  பார்க்க வழி ஏற்படுத்துங்கள். 

இன்று நமது மக்களின் நோயை வைத்து எத்தனை டாக்டர்கள் காசை பிடுங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது யாருக்கு தெரியும் ?

அறிவாலும், நோயற்ற வாழ்வாலும் சமுதாயத்தை பேணி பாதுகாப்போம்.


வெற்று கோசங்களால் அல்ல.

“இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” - Al Quran 46:15


ஒரு மய்யித்தைப் பின்தொடர்ந்து மூன்று விஷயங்கள் செல்லும்: 
1. அவனுடைய குடும்பம் 2. சொத்து 3. அமல் 
அவற்றில் இரண்டு திரும்பி விடும். ஒன்று மாத்திரம் அதனுடன் இருக்கும். குடும்பமும் சொத்தும் திரும்பி விடும். அமல் மாத்திரம் கூட இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
    ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்றைத் தவிர அவனது செயல்பாடுகள் முடிவுக்கு வந்து விடுகின்றன. அவைகளாவன: 1.நிலையான தர்மம், 2. பயனளிக்கும் கல்வி, 3. தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள குழந்தை ஆகியனவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
  

 




Tuesday 28 February 2012

57 தமிழக அரசின் சமச்சீர் கல்வி மாதிரி வினாத்தாள்

தமிழக அரசின் சமச்சீர் கல்வி மாதிரி வினாத்தாள்

http://www.tn.gov.in/schooleducation

பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை

http://www.samacheerkalvi.in/10th_Model_Question_Paper.php

By

என்றும் மக்கள் நலப்பணியில்


Hasan

MEERA SOCIAL TRUST (MST)
MELAPALAYAM IMPROVEMENT TRUST (MIT)
MELAPALAYAM - 627005

E-mail: hasanmmk@gmail.com



Monday 27 February 2012

56. ஷஹீத் இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களின் பத்து அறிவுரைகள்

ஷஹீத் இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) 
அவர்களின் பத்து அறிவுரைகள்
படியுங்கள்! சிந்தியுங்கள்!! செயல்படுங்கள் !!!

1. எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும் பாங்கொலி கேட்டவுடன் தொழுகைக்காக எழுந்து செல்லுங்கள்.

2. அல்குர்ஆனை ஓதுங்கள்; அல்லது அதனைச் செவிமடுங்கள்; அல்லது அல்லாஹ்வை திக்ர் செய்யுங்கள். உங்களது நேரத்தின் ஒரு பகுதியைக் கூட பயனின்றிக் கழித்துவிடாதீர்கள்.

3. அரபி மொழியைக் கற்பதற்கும் பேசுவதற்கும் முயற்சி செய்யுங்கள். ஏனெனில், அது இஸ்லாத்தின் மூலாதார நூல்களின் மொழியாகும்.

4. எந்தவொரு விஷயத்திலும் தர்க்கம் புரியாதீர்கள். ஏனெனில், தர்க்கம் புரிவதால் எந்த நன்மையும் விளையாது.

5. அதிகமாகச் சிரிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வுடன் தொடர்புள்ள மனிதன் எப்போதும் அமைதியாகவும் கண்ணியமாகவுமே நடந்து கொள்வான்.

 6. யாரையும் பரிகாசம் செய்யாதீர்கள். ஏனெனில், வெற்றியை இலக்காகக் கொண்ட சமூகம், எதையும் இலக்கோடுதான் பார்க்கும்.

7. தேவையைவிட அதிகமாகக் குரலெழுப்பாதீர்கள். அது பிறருக்கு விகார மாகவும் தொல்லையாகவுமே இருக்கும்.

8. தனிமனிதர்களைப் பற்றிப் புறம் பேசுவதையும் அமைப்புகளைக் குறை கூறுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். நல்லவற்றைத் தவிர வேறெதையும் பேசாதீர்கள்.

9. நீங்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு சகோதரருடனும் அறிமுகமாகிக் கொள்ளுங்கள். அவர்கள் அதனை உங்களிடம் எதிர்பார்க்காவிட்டாலும் சரியே. ஏனெனில், நமது அழைப்புப் பணியின் அடிப்படையே பரஸ்பர அறிமுகம்தான்.

10. நேரத்தைவிட கடமைகள் அதிகம். பிறர் தமது நேரத்தைப் பயனுள்ளதாக்க உதவுங்கள். பிறரிடம் உங்களுக்கு ஏதாவது தேவையிருந்தால் அதைச் சுருக்கமாக முடித்துக்கொள்ளுங்கள்


Hasan Al Banna Slogan in Tamil

Saturday 4 February 2012

55. VERGAL PUBLISH BOOKS CHENNAI



VERGAL PUBLISH BOOKS CHENNAI
VERGAL PATHIPPAGAM


AFGANISTAN MUJAHIT HISTORY
MALCOM X
PARLIMENT ATTACK
ZAINAB AL KAZZALI
SENTAMIL NATTU CHERIKAL
KADAVULAI MATRUVOAM
SAATHI OLINTHATHU
NAAM PRINTHU VIDA VENDAAM
NEETHIPATHIYIN VIDUTHALAI MULAKKAM
TALIBAN PIDIYIL YVONNE RIDLEY
KARKARE KOLAI SEITHATHU YAAR

Wednesday 1 February 2012

54. திட்டமிடல் மூலம் நமது சமூகத்தை பலப்படுத்துவோம்

திட்டமிடல் மூலம் 

நமது சமூகத்தை பலப்படுத்துவோம்

மீண்டும் ஒரு இஸ்லாமிய புதுவருடத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். முஹர்ரம் என்றவுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத்தும், அதனையொட்டி மேற்கொள்ளப்பட்ட அவரது ஆழ்ந்த திட்டமிடலும்தான் எப்போதும் எமது நினைவுக்குவரும்.


அந்தவகையில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கான சிறந்த மூல உபாய திட்டமிடல் குறித்து சிந்திக்கத் தலைப்பட வேண்டும். உடனடியாக நம்மால் அவ்வாறான ஒரு திட்டத்தை வரைய முடியாவிட்டாலும் கூட, முதல் கட்டமாக அதனை குறைந்தபட்சம் ஒரு பேசுபொருளாகவேனும் மாற்ற வேண்டும். 


எல்லா மாற்றத்திற்குமான முதல்படி, அது பற்றிய விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்துவதுதான். அந்தவகையில் சமீபகாலமாக இந்த விடயம் தொடர்பாக ஓரளவு கவனம் செலுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. 


திட்டமிடல் கலாச்சாரம் எம்மிடையே நன்கு வலுப்பெறவில்லை. முஸ்லிம் பாடசாலைகள் கூட இப்பொழுதுதான் ஓரளவுக்கு திட்டமிடல் பற்றி சிந்திக்கின்றன; சில ஆரம்ப எட்டுகளை வைத்துள்ளன. 


எமது பெரும்பாலான சமூக நிறுவனங்களுக்கு முறையான திட்டங்கள் எதுவுமில்லை. அவற்றுள் சிறுகுழு அல்லது  தனிமனித ஆதிக்கமே நிலவி வருகிறது. இந்த நிலையை கூடிய விரைவில் இல்லாதொழிக்க வேண்டும்.

எல்லோரும் ஒன்றுபடும் குறைந்தபட்ச பொதுப்

புரிதலின் அடிப்படையிலான திட்டங்கள்

வரையப்பட வேண்டும். இதுதான் நாம் 

முன்னேறுவதற்கான வழி.


இலங்கையின் மிகப் பின்தங்கிய சமூகங்களுள் ஒன்றான மலையகத் தமிழர்களது கல்வி தொடர்பான ஒரு வேலைத் திட்டம் 10 வீடுகளுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குதல் என்பதாகும். எவ்வளவு சிறிய - ஆனால் மிகத் தெளிவான - இலக்கு இது. 

எமது சமூகத்திடம் இதுபோன்ற திட்டங்கள் உள்ளனவா என்று கேட்டால் அதற்கான பதில் எம்மிடமில்லை. 


முஸ்லிம் சமூகத்தை பல முனைகளில் வலுவூட்ட வேண்டியுள்ளது. அந்தவகையில்தான் எமது சமூகத்தின் மூல உபாய இலக்கு குறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது.


நமது சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக பலரும் மணித்தியாலக் கணக்கில் பேசுவதை நேர்ப்பேச்சிலும் கூட்டங்களிலும் அடிக்கடி கண்டும் கேட்டும் வருகிறோம். 


ஆனால், பிரச்சினைகளைப் பேசும் அளவுக்கு தீர்வுகளை நோக்கி நாம் போவதில்லை.  


இது ஏன்? எமது சமூகத்தினரிடையே நேர்-மைய சிந்தனைப் பாங்கை விட, எதிர்மறையான சிந்தனைப் போக்கே ஆதிக்கம் செலுத்துகிறது. எம்மில் பலருக்கு எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் அறவே அல்லது போதிய தெளிவுகள் இல்லை. 


இந்த நிலையை மாற்றியமைப்பதற்கான முயற்சியை நாம் இப்போதிருந்தே தொடங்க வேண்டும். ஏற்கனவே, நாம் இந்த விடயத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். எம்மைச் சூழவுள்ள சமூகங்களும் அதிகார மையங்களும் இந்த விடயத்தில் எவ்வளவோ தூரத்திற்கு முன்னே சென்று விட்டன. 

பின்தங்கிய சமூகமாக நாம் இனியும் இருப்பதா

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிடலால் பலப்படுத்தப்பட்ட, விளைவுகளால் பயன்பெற்ற சமூகமாக நமது சமூகத்தை
மாற்றுவதற்கான பணியை இந்தக் கணத்திலிருந்தே 
தொடங்குவோம்.
-ஆசிரியர் பக்கம்

8:53“ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) 
          மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய 
          அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ்
          (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) 
          நன்கறிபவனாகவும் இருக்கின்றான்
http://www.tamililquran.com


மாற்றம் தானாக வருவதில்லை, 


அதை நாம் தாம் வரவழைக்க வேண்டும் 




---------------------------


MELAPALAYAM IMPROVEMENT TRUST
MELAPALAYAM
TIRUNELVELI DISTRICT
PINCODE : 627005

Tuesday 31 January 2012

53. அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம் AL-IDARA I.A.S Guidance Center


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஓர் நற்செய்தி!!
அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

அன்பான சகோதரர்களே,

இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.
இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை சென்றடைய ஓர் அரிய, எளிய மாற்று வழி இருப்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்?
இதனை பற்றி விவரமாக அறிந்து கொள்ள இந்த லிங்க் ஐ பார்க்கவும்

Link à ஆளும் சக்தியா? அதிகார சக்தியா?

இதற்காக உருவாக்கப்பட்டது தான்
Al-Idara I.A.S guidance center

அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

இதன் நோக்கம்

நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும் சாதிக்க முடியாததெல்லாம் I.A.S அதிகாரிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும். மேற்கண்ட பெரிய பதவிகளில் இருப்பவர்களை எல்லாம் இயக்குபவர்கள் I.A.S அதிகாரிகள் தான் என்பதையும், அந்த அதிகார மையத்தை கை பற்றுவது இயலாத காரியம் இல்லை என்பதையும் உணர மறுக்கின்றனர்.
இதை பற்றி முழுமையான முறையில் விழிப்புணர்வூட்டி I.A.S-க்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து, சென்னை, மற்றும் டெல்லியில் உள்ள சிறந்த I.A.S பயிற்சி அகாடமிகளுடன் இனைந்து செயலாற்றவும், அதன் மூலம் நமது இளைஞர்களை இறை அச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வுகளை ஊட்டி பக்குவபடுத்தி இஸ்லாத்திற்கும், இந்தியாவிற்கும் விசுவாசமான IAS அதிகாரிகளாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

ஆலோசனை குழு

இதற்கான ஆலோசனை குழுவில் (ADVISORY BOARD) தற்போது பணியில் உள்ள மற்றும் ஒய்வு பெற்ற I.A.S அதிகாரிகளை இணைத்து அவர்களது மேலான ஆலோசனைகளுடன் இயங்க உள்ளது.
ஆர்வமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

அடிப்படை தகுதிகள்

  • ஏதேனும் ஒரு UG டிகிரி முடித்து இருக்க வேண்டும்
  • 21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்
தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை.
822, மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
அண்ணா சாலை, சென்னை .
Ph. 98408 99012, 98847 06795
ஈமெயில் : admin@makkamasjid.com

------------------------------------------------
BY:
MEERA SOCIAL TRUST (MST)
MELAPALAYAM
மீரா சமூக அறக்கட்டளை
 மேலப்பாளையம்